Header Ads



ஜனாதிபதியிடம் அமைச்சு, பதவி பெறமாட்டேன் - ராஜித திட்டவட்டமாக அறிவிப்பு

தான் ஜனாதிபதியை சந்தித்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ள இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பான்மையை விரைவில் பாராளுமன்றத்தில் நிருபிப்பதாக அவர் வௌிளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு தான் ஒருபோதும் துணை நிற்பதில்லை என்றும், அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டு ஜனநாயகத்திற்கு துரோகமிழைப்பதை தான் ஒருபோதும் செய்யப் போவதில்லை என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.