Header Ads



7ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டடாவிட்டால், மக்களுடன் இணைந்து அதனை கைப்பற்றுவோம்

எதிர்வரும் 07ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படாவிட்டால் மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார். 

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்தவொரு உறுப்பினரும் இதுவரை அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றும், வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதில் சதித்திட்டம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

மக்களுடன் இணைந்து தமக்கு பாராளுமன்றத்தை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் ஏதாவது தவறு இடம்பெற்றால் அதற்கு பாராளுமன்றத்தை பிற்போடும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.