Header Ads



கிடுகிடு என, வரவுள்ள 2 தேர்தல்கள்

மாகாண சபை தேர்தலை விரைவுப்படுத்தும் முகமாக  நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் செயற்பாடுகளை முன்னாள்  பிரதமர் இழுத்தடித்தமையும்,  ஆட்சிமாற்றத்தின் பிரதான காரணமாக காணப்படுகின்றது. எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் செயற்பாடுகள் தற்போது  ஜனாதிபதியிடம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது.வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலுக்கான வர்த்தமானி  வெளியிடப்படும் என  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன   லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.

அடுத்த   வருடத்தின் முதற்காலாண்டில்  மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடைப்பெறும். 

அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் வெகுவிரைவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

இதற்கு  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.