Header Ads



சவூதியில் மாரடைப்பினால் மரணமாகியவரின், ஜனாஸா ஏறாவூரில் நல்லடக்கம்


கடந்த 24.10.2018 அன்று சவூதியில் மரணமான ஏறாவூர் இளைஞர் உடற்கூறாய்வு பரிசோதனைகளுக்கு பின் இன்று (31.10.2018) ஏறாவூரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஏறாவூர் இளைஞர்  கடந்த 24.10.2018 அன்று மாரடைப்புக் காரணமாக மரணமாகியுள்ளார்.

சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த ஏறாவூர் ஐயங்கேனி  அக்பர் பள்ளி வீதியை சேர்ந்த பஸீர் சுஹைல் (வயது 27) என்பவரே இவ்வாறு ஜித்தாவிலுள்ள அஸீசியா சென்னை தர்பார் ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமாகியுள்ளதாகவும் இவர் கடந்த ஐந்தரை வருடங்களாக சவூதி அரேபியாவில்  வேலை பார்த்து வந்துள்ளார் எனவும் இவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

அவரது ஜனாஸா சவூதி அரேபியா வைத்தியசாலையில் உடற்கூறாய்வூ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்  அவரது சொந்த ஊரான  ஏறாவூருக்கு கொண்டுவரப்பட்டு இன்று -31- காட்டுப்பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

-Vidivelli 

3 comments:

  1. He is working for Cheennai Darbar
    he passed way while at His room getting ready to go for Work
    may allah make the things easy for him
    nice person.

    ReplyDelete
  2. InNaalillahi WaHinnaa Ilyhi Raaajihoon

    ReplyDelete
  3. Inhalilahi Wahinnaa Ilyhi raaajihoon engaludya irudi mudivai nalladha aakidu rahman

    ReplyDelete

Powered by Blogger.