மைத்திரி அறையில் இருக்க, மஹிந்த - ரணில் திறந்தநிலை சந்திப்பு
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்தவும் இரகசிய சந்திப்பை நடத்தினர் என்று முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அதில் உண்மையில்லை என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் ரணிலின் அலுவலகத்துக்கு முதல் தடவையாக விஜயம் செய்தார்.
இதன்போது அடுத்த அறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருந்தார்.
இந்தநிலையில் பிரதமரும் மஹிந்தவும் திறந்தநிலை சந்திப்பு ஒன்றையே நடத்தினர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்தவும் இரகசிய சந்திப்பை நடத்தினர் என்று முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் அதில் உண்மையில்லை என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் ரணிலின் அலுவலகத்துக்கு முதல் தடவையாக விஜயம் செய்தார்.
இதன்போது அடுத்த அறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருந்தார்.
இந்தநிலையில் பிரதமரும் மஹிந்தவும் திறந்தநிலை சந்திப்பு ஒன்றையே நடத்தினர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
Post a Comment