Header Ads



முன்னாள் ஆட்சியாளர்கள் தமக்குத் தாமே, வெடிவைத்துக் கொள்ளவுள்ளனர் - அமைச்சர் ராஜித

-நஜீப் பின் கபூர்-

களுத்துறை மாவட்ட பாடசாலை வைபவமொன்றில் 06-12-2015 பங்கு கொண்டு பேசுகின்ற போது சுகாதரர அமைச்சர் ராஜித சேனாரத்ன பல தகவல்களை அங்கு அம்பலப்படுத்தினார். 

எவன்கார்டிடம் பணம் வாங்கிய ஊடகவியலாளர்கள் பட்டியல் பற்றிய தகவல் ஒன்றும் இதில் அடங்குகின்றது, என்று அவர் குறிப்பிட்டார். இவர்களின் பெயர்களைப் பார்க்கும் போது எனக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார். 

எதிர்வரும் காலங்களில் இவை சாட்சிகளுடாக உறுதியாகும்  போது - முன்னாள் ஆட்சியாளர்கள் தமக்குத் தாமே வெடி வைத்துக் கொள்வார்கள், அல்லது கடலில் போய் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்று, இது பற்றிய தகவல்களை அறிந்த அதிகாரிகள் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்து வருவதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.