Header Ads



வசீம் தாஜூடீனின் கொலையுடன், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் தொடர்பு

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் மூன்று ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 10ம் திகதி தாஜூடீனின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

அதன் பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்படைய மூன்று ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தாஜூடீனை கடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸவின் தன்னார்வ நிறுவனமான சிரிலியே சவிய அமைப்பின் வாகனம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

பிரித்தானியாவிற்கு குறித்த நபர் செல்வதற்கு உதவி வழங்கிய ராஜதந்திரி ஒருவர் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.