Header Ads



சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை - மன்னர் சல்மானுக்கு கடிதம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப் பெண்ணை விடுவிக்குமாறு, ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளது. 

இது தொடர்பில் சவுதி அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

சவுதி சட்டங்களை உரிய முறையில் தெரிந்திருக்காமையாலேயே அப் பெண் அவ்வாறு நடந்திருக்கலாம் என, அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே அவர் மீது இரக்கம்காட்டி விடுதலை செய்ய வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக, ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் குறிப்பிட்டுள்ளார். 



1 comment:

  1. Mc.summa joak adikadinga sharia sattam theerpu Saatchi illamal varthu mc.thaam pesiyathaha padam Katya JM.thunai pohadeergal

    ReplyDelete

Powered by Blogger.