உடலை எரிக்கும்போது வெடித்த தகனச்சாலை, சடலத்தை புதைக்க நடவடிக்கை
களுத்துறை – வளல்லாவிட – மீகஹதென்ன தகனச்சாலையொன்றில் மனித சடமொன்றை தகனம் செய்யும் போது அங்கு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நேற்று (06) பிற்பகல் இடம் பெற்ற இந்த வெடிப்பின் போது உயிராபத்து எதுவும் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
தகனச்சாலையின் எரிவாயு குழாயில் மேற்படி வெடிப்புச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
எனவே , தகனச்சாலை செயற்படாததால் குறித்த சடலத்தை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment