Header Ads



மென்மை போக்குடன் மைத்திரி..!

கூட்டு எதிர்க்கட்சியினருடன் மாதாந்தம் பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளார்.

ஆளும் கட்சி எதிர்நோக்கி வரும் சவால்களை வெற்றி கொள்ளும் நோக்கில் இவ்வாறு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடு, ஆளும் கட்சி தொடர்பிலான விமர்சனங்கள் குறித்து இந்த சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

முன்னதாக கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தனர்.

எனினும் தற்போது ஜனாதிபதியே இந்த உறுப்பினர்களை மாதாந்தம் சந்திக்க நேரத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை சிங்கள பத்திரிகையொன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.