Header Ads



மகிந்தவின் கேள்வியால், அரசாங்கத்திற்குள் குழப்பமா..?

தேசிய பாதுகாப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியால் அரசாங்கத்துக்கள் குழப்பங்கள் எற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் தேசிய பாதுகாப்பு குறித்து மகிந்த ராஜபக்ச முன்வைக்கும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைக் காணுமாறு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் அமைப்புகள் மற்றும் சில தனிநபர்கள் மீது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடைகளை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நீக்கியிருந்தது. அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் 39 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆகவே அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கும் என மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.