Header Ads



வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக, யாழ்ப்பாண முஸ்லீம்கள் பிராத்தனை


-பாறுக் ஷிஹான்-

வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களின் நலனிற்காக யாழ் முஸ்லீம்கள் பிராத்தனை நிகழ்வொன்றினை மேற்கொண்டனர்.

இன்று மதியம்(6) ளுஹர் தொழுகையின் பின்னர் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முகையதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் இயற்கை அனர்த்தம் தொடர்பாக முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி, உரையாற்றினார்.

தொடர்ந்து முல்லைத்தீவு உலமா சபை  தலைவர் பரீட் மௌலவி துஆ பிராத்தனைக்கு தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக யாழ் அதிகாரி தச்சணா மூர்த்தி ,மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அய்யூப்,தகவல் வழிகாட்டல் மையம் பொறுப்பாளர் நிபாஹீர் ,பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.