Header Ads



பள்ளிவாசல் கட்டக்கூடாது என கையெழுத்துப்போட்டவர்கள், BJP யை ஓடஓட விரட்டினர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சைதாப்பேட்டையில் முஸ்லிம்களின் தொழுகைக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக ஒரு இடம் வாங்கி பள்ளிவாசல் பணிகளை துவக்கிய போது அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான காளிதாஸ் அப்பகுதி இந்து மக்களை திரட்டி பள்ளிவாசல் பணிக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி பணியை தடை செய்தார்.

பல அப்பாவி இந்துக்களைத் தூண்டிவிட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கி சைதாப்பேட்டையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க விடமாட்டோம் என்று சுவரொட்டிகள் துண்டுப்பிரசுரங்கள் மூலம் வன்முறையைத் தூண்டினார்.

மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சைதாப்பேட்டைக்கு எந்த அரசியல் கட்சியும் செல்லவில்லை. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் உணவுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொடுத்தனர்.

மலையாய் தேங்கிய குப்பைகளையும் லாரி மூலம் ஜமாஅத் செலவில் தொண்டர்கள் மூலம் சுத்தம் செய்தனர்.

நிலைமை சீரானப்பிறகு காளிதாஸ் பாஜக கொடியைக் கட்டிக் கொண்டு நிவாரண நாடகம் நடத்த சைதாப்பேட்டை மக்களிடம் வந்தார்.

கோபத்தில் கொந்தளித்து திரண்ட அப்பகுதி இந்துக்கள், பள்ளிவாசல் இங்கே கட்டக்கூடாது என்று கையெழுத்துப்போட்டவர்கள் காளிதாசின் காரை உடைத்து இங்கே பாஜக காரன் எவனும் வரகூடாது என்று ஓட ஓட விரட்டியுள்ளனர்.

சரியான சேவைக்கு முன்னால் மதவெறி தோற்று விடும் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.
மதத்துவேஷத்தை விரட்டி மனிதநேயத்தை நிலைநாட்டி விட்டார்கள் அப்பகுதி இந்து மக்கள்.

19 comments:

  1. ungada seveykhala oru kavidayaka katti paadina nallame.

    ReplyDelete
  2. இஸ்லாம் மனிதநேயதுக்கு எதிரானது என்று கோஷமிடும் சிலருக்கு இவைகளை கேக்கும்போது கடுப்பாக இருக்கும்

    ReplyDelete
  3. Masha Allah! Allah is the greatest plotter and May he recognizes the prodigious services of the TNTJ brothers..!

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் சேவை நிஸாருக்கு தலையிடியாய் உள்ளது பயப்படவேண்டாம் நண்பா உங்களைப்போல் தௌகீத்காரண் கவிபாடி வயிறுபிழைக்க மாட்டான் உழைத்து அதிலும் ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதே நபிவழி என்பதை உணரந்துதான் இஸ்லாத்தின் பெயரால் வறியிபிழைப்பவர்களை வெறுத்து வந்தோம் இனியும் செல்ல வாய்ப்பில்லை நீங்கள் வேண்டுமானால் கவி தயாரித்து (மௌலீத் ) ஓதுங்கள் நல்லாப் பிழைப்பு நடத்தலாம்

    ReplyDelete
  5. இல்ல கூப்புட்டு கந்தூரி கொடுத்து மௌளத்து ஓதினா அத விட நல்லா இருக்கும்.

    வைக்கோல்கந்தில் கிடக்கும் நாய் மாரி சில பேர் நமது சமூகத்திலும் உள்ளனர். அவர்கள்தான் காவிகளுக்கு எட்டப்பன் வேலை செய்பவர்கள்.

    ReplyDelete
  6. அந்த இடத்தில் ஒரு இஸ்லாமியர் இருந்திருந்தால் அந்த காளிதாசையும் காப்பாற்றி இருப்பார். இதுவும் எங்களுக்கு சொல்லித்தந்த பாடங்களில் ஒன்று . எங்களுக்கு அநியாயம் செய்த ஒருவருக்கு ஆபாத்து என்றாலும் அவருக்கும் நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம் அது யாராக இருந்தாலும் சரியே ............

    ReplyDelete
  7. யார் இந்த நிசார் நிசான் அடித்துக்கொன்டு அடிக்கடி கருத்து சொல்கின்றார் போதை தெழிந்தபின் தெழிவாக படித்து கருத்து எழுதுங்கள் PLEASE

    ReplyDelete
  8. நிசார் ரொம்ப ஓவராகத்தான் இருக்குறது எல்லாவற்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான் மூமீன்களை,முஸ்லீம்களை ஏளனம் செய்வோரை அல்லாஹ் ஏளனம் செய்கிறான் (சிறா தௌபா)ஆகவே அல்லாவை பயந்து கொள்ளுங்கள் ,

    ReplyDelete
  9. I sense too much boasting about TJ..

    ReplyDelete
  10. PIRIVU SARPAHA avarhalai parkka vendam inam sarpaha anda sahodarhalai paarungal Mr.Nizar

    ReplyDelete
  11. பாவம் நிசார் ஏகத்துவவாதிகள் ஏமாற்று புழப்புல மண்ணை அள்ளி போட்டு விட்டார்கள்,இனி கிழவி ஏமாந்த தாய்மார்களை யாரையும் ஏமாற்றி வயிறு வளர்க்க முமுடியாது அதனால் புகையிலை சாயம் குடித்த ஓணால் போல் நிசாருக்கு மயக்கம் கவலைப்பட வேண்டாம் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் உங்களை வந்தடையும் அப்போது மயக்கம் தெளியும் அல்லது அதிகமாகும்

    ReplyDelete
  12. தவ்ஹீத் என்று இருந்தாலே நிஜாருக்கு கடுப்பாகிறது! பாவம் தவ்ஹீத் ஜமாஅத் ஆல் அவர் பிழைப்பில் மண் விழுந்ததோ தெரியாது.

    ReplyDelete
  13. u all need to undustand that i am against only ur unwanted publicity used to gain crook advantages like promoting the group, etc. I have no right to talk ur good works as it is known to u and Allah only. U people cannot b allowed spread ur Koluhal just because of ur social work. If Shia people adapt the same stratergy to spread their koluhal, will anyone appreciate their good works? The same applies here. Thaw people are encouraged to use enough bad words against me so that all their good deeds will b transfered to my account or should i forgive? Paawam, who is paawam ? No body but Thaw.

    ReplyDelete
  14. Nizar I agree with you at this point

    ReplyDelete
  15. 2 அறிவிலிகள் இங்கே

    ReplyDelete
  16. Siyath mohamed செரியாக சொன்னீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.