Header Ads



3 பில்லியன் பணம் களவு - CID யிடம் முறையிட்டார் அமைச்சர்

இலங்கை மின்சார சபையின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு சேர வேண்டிய ரூபா 3 பில்லியன் பணம் கையாடப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சரான, ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய தினம் (09) மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டில், கடந்த 2009 ஆம் ஆண்டில், ரூபா 2,959,267,568 (29 கோடி 592  இலட்சத்து 67 ஆயிரத்து 568)  பணம் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் திறைசேரியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், 2014.12.31 அன்று மத்திய வங்கியின் அறிக்கையின் அடிப்படையில் அது அவ்வாறு வைப்பிலிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தனியார் நிறுவனத்தால் அப்பணம் அதே ஆண்டில் (2009), மின்சார சபையின் அனுமதியின்றி மத்திய வங்கியிலிருந்து மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அமைச்சரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.