Header Ads



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை கிளையின் இரத்ததான முகாம் 2015

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மாவனல்லை கிளை பல்வேறு சமூகநலப் பணிகளை நீண்டகாலமாக நடத்திவருகின்றது. அதில் 1999 ஆண்டுமுதல் ஆரம்பிக்கப்பட்ட இரத்ததானமுகாமும் அதில் ஒன்றாகும். கடந்தவருடம் 528 இரத்தபைந்துகள் இரத்தவங்கிக்கு வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

தனிமனிதர்களால் நிறைவேற்ற இயலாத பாரியபணிகளை ஒரு கூட்டமைப்பினால் இலகுவாக இனிதே நிறைவேற்றிவிடுகிறது. அன்பு,சகோதரத்துவம்,மனிதநேயம் முதலான விழுமியங்கள் பேசுபொருளாக கொள்ளப்படும் இக்காலப்பிரிவில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிமாவனல்லைக் கிளை வருடாவருடம் நடத்தி வரும் இரத்ததான முகாம் 10வது தடவையாக இவ்வருடம் டிசம்பர் 13 ஆம் திகதி ராழியா வரவேற்பு மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. அதில் நீங்களும் கலந்துகொண்டு மனிதர்கள் அனைவரையும் வாழவைக்கும் முயற்சியில் பங்குதாரர் ஆகுங்கள்.

ஊடகப்பிரிவு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
மாவனல்லைக் கிளை

1 comment:

  1. Keep doing this kinda good work. May Allah reward you guys according to your intention.

    ReplyDelete

Powered by Blogger.