லண்டனில் இமாம் படுகொலை - பள்ளிவாசலில் போலிஸ் சோதனை
சிரியாவின் முன்னாள் இமாம் ஒருவரின் கொலை விசாரணையின் ஒரு பகுதியாக லண்டனிலுள்ள பள்ளிவாசலொன்றில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்துல் ஹாதி அர்வானி என்ற இந்த இமாம், ஒரு வாரத்திற்கு முன்னர் லண்டன் புறநகரான வெம்ப்லியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையின் அவசியம் தேவை என்று முஸ்லீம் சமுதாயத்துக்கு உறுதியளிக்க, முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுடன் போலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், , பள்ளிவாசல் முடிந்த அளவில் விரைவாக மீளத் திறக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட அப்துல் ஹாதி அர்வானி, சிரிய அதிபர் அஸாத்தை எதிர்த்து வந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment