Header Ads



புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க போகிறேன் - சோமவன்ஸ அமரசிங்க

இலங்கையில் சமதர்மத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஜே.வி.பி தவறவிட்டு வருவதாக அதன் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் சமதர்மத்தை ஜே.வி.பியினாலேயே ஏற்படுத்த முடியும். ஆனால் அதற்கான வழியை ஏற்படுத்தி கொள்வதில் ஜே.வி.பியிடம் பிரச்சினைகள் உள்ளன.

அதனை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது, அறிந்தோ அறியாமலோ அதனை காலம் தாழ்த்தி வருகின்றனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உண்மையான அரசியல் நிலைமையை பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை பிரயோசனப்படுத்தி கொள்ளாமல் உள்ளனர் எனவும் சோமவன்ஸ அமரசிங்க கூறியுள்ளார்.

அதேவேளை புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும், அதன் மாநாட்டை நடத்த போவதாகவும் அந்த மாநாட்டின் பின்னர், நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அமைய மக்கள் மத்திக்கு செல்ல போவதாகவும் சோமவன்ஸ அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. JVP யில் இருக்கும் பொழுதே இவருக்கு எந்த மதிப்பும் இருக்கவில்லை, தனிக் கட்சி துவங்கினால், இவரின் மனைவியே இவருக்கு வோட்டுப் போடுவாரா என்பது கூட நிச்சயமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.