புத்தாண்டு வாழ்த்து கூறுவதில், சிங்களவர்களை மறந்த எட் மிலிபாண்டுக்கு கண்டனம்
பிரித்தானியாவின் தொழில் கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் விடுத்திருந்த சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி குறித்து, லண்டனில் உள்ள சிங்கள சமுக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அவரது வாழ்த்துச் செய்தியில் தமிழர்களுக்கு மாத்திரமே புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
பிரித்தானியாவில் உள்ள தமிழ் சமுகத்துக்கு தொழில் கட்சி எப்போதும் பக்கபலமாக இருக்கும் என்றும், யுத்தக்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வாழ்த்து குறிப்பில் சிங்கள மக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு லண்டனை தளமாக கொண்டு இயக்கும் சிங்கள அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment