Header Ads



கற்பிட்டி விபத்தில் 24 பேர் காயம்

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டி பாலாவி பிரதான வீதியில் மாம்புரிய எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை 4.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர். 

கற்பிட்டி பகுதியிலிருந்து பாலவியை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் பின்பக்கத்தில், அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் இரண்டு பஸ்களிலும் பயணித்தோரில் ஆண்கள், 09 பேர், பொண்கள் 12 பேர், மூன்று பிள்ளைகள் என 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.