Header Ads



''மகிந்த ராஜபக்சவிற்கு முடியாது'' அடித்துச் சொல்கிறார் மைத்திரி

ஜனாதிபதி தேர்தலின் போது, ஊழல் மற்றும் மோசடிகள் இடம் பெற வாய்ப்பில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்;.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற போவதில்லை. இன்று அரசாங்கம் முன் எடுத்து செல்லும் முற்றிலும் பொய்யான பிரசாரம். இதற்கு நீங்கள் ஏமாற வேண்டாம்

தோல்வியை ஜீரணிக்க முடியாதவர்கள், கூட்டங்களுக்கு தாக்குதல் நடத்துகின்றனர். தேர்தல் மேடைகளுக்கு தீ வைக்கின்றனர். எங்களது மக்களுக்கு இடையூறு விளைவிக்கின்றனர்.

ஆனால் மகிந்த ராஜபக்சவிற்கு முடியாது. அதிகாரத்தில் இருந்து அவர்களை மக்கள் வெளியேற்றி விட்டார்கள். ஏதாவது செய்து வெற்றி பெற நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.