Header Ads



பல்டி அடிக்கலாம் என நம்பப்படும் அமைச்சர்களின் வீடுகள் இராணுவ கட்டுப்பாட்டில்..!

அளும் கட்சியிலிருந்து தாவி, பொது வேட்பாளர் மைத்திரிபல சிறிசேனவுக்கு ஆதரவளிக்கலாம் என நம்பப்படுகின்ற அமைச்சர்கள் சிலரின் வீடுகளுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மைத்திரிபால அணியைச் சேர்ந்தவர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தனர்.

சில அமைச்சர்கள் தமது வீடுகளை விட்டுச் செல்லாதவகையில் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வீடுகளைச் சுற்றி இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மைத்திரி அணி, மைத்திரிக்கு ஆதரவளிக்கலாமென நம்பப்படும் 3 முக்கிய அரசியல் பிரபலங்களின் பெயர்களையும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியப்படுத்தியது.

இருந்தபோதும் அவர்களின் பெயர்களை தற்போதைக்கு பகிரங்கப்படுத்த வேண்டாமெனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

2 comments:

  1. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் பண்டு பண்டாரநாயக்க ஆகிய மூவருமே

    ReplyDelete
  2. What about janaka bandara?

    ReplyDelete

Powered by Blogger.