Header Ads



மைத்திரிபால உரையாற்றிய போது, கல்வீச்சுத் தாக்குதல் நடாத்திய இருவர் கைது

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பெல்மடுலையில் இடம்பெற்ற எதிர்கட்சிகளின் பிரசார கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

பெல்மடுலை பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மேடையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், கூட்டத்தில் இருந்து கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து பொது வேட்பாளர் அவரது பாதுகாவளர்களால் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.