Header Ads



பைறுஸ் ஹாஜி கண்காணிக்கப்படுகிறார்..!

-அஷ்ரப் ஏ சமத்-

ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை உறுப்பினர் பைறுஸ் ஹாஜியார் அவர்களை இனம் தெரியாத நபர்கள் பின் தொடர்வதகவும் அவரின் காரியாலயம்  மற்றும் அவரது வீட்டை அன்மித்தபகுதியிலும் இனம் தெரியாத நபர்கள் அவரை விசாரித்து செல்வதாகவும் அவரின் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்று மாலைவேளை அவரின் மாளிகாவத்தை கரியலத்துக்கு அருகில் சில இனம் தெரியாத நபர்கள் உலவியுள்ளதாகவும் அங்கிருந்த சிலர் அவரிடம் குறிப்பிட்டுள்ளத தெரிவிக்கப்படுகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிரிகொத்த முன் இடம்பெற்ற முறுகல் சம்பவத்தில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பைறுஸ் ஹாஜியாரின் குழுவே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தாக கூறப்படும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆர்பாட்ட காரர்கள் குற்றம் சுமத்தியிருன்தனர்.

இது  தவிர வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள மைத்ரியின் கடைசி பிரசார கூட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்பவர்கள் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பைரூஸ் ஹாஜியார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.