Header Ads



சிறுபான்மை மக்களை இந்நாட்டின் உண்மையான, நாட்டுப்பற்றுள்ள பிரஜைகளாக வாழ இடம்கொடுப்போம் - ராஜித

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்­கா­ததன் கார­ணத்­தி­னா­லேயே கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தமிழ் பிர­தி­நி­திகள் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்க விரும்­பா­மல் பிரி­வி­னை­யினை அர­சாங்கம் தூண்டி விடு­கின்­றது என தெரி­விக்கும் பொது எதி­ர­ணி­யினர், எமது தேசிய அர­சாங்­கத்தில் தமிழ் மக்கள் ஒதுக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­ப­டு­மெ­னவும் குறிப்­பிட்­டது.

பொது எதி­ர­ணி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இணங்கி செயற்­ப­டு­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு கிடைக்கும் தீர்­வுக்­கான சந்­தர்ப்­பத்­தினை இழக்கும் செய­லென அர­சாங்கம் குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் இது தொடர்பில் பொது எதி­ரணி உறுப்­பினர் ராஜித சேனா­ரட்­ன­ எம்.பி.யிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
கடந்த முப்­பது வரு­டங்கள் நாட்டில் யுத்தம் நில­விய சூழ்­நி­லையில் பாதிப்­புக்கள் மூவின மக்­க­ளையும் சார்ந்­தி­ருந்­தது. எனினும் யுத்தம் முடி­வ­டைந்து இன்று நாட்டில் சிங்­கள முஸ்லிம் மக்கள் சுதந்­தி­ர­மாக செயற்­பட்­டாலும் தமிழ் மக்கள் இன்றும் அச்­சு­றுத்­த­லான சூழ­லி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். வடக்கு கிழக்கில் இன்றும் தமிழ் மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். தமது காணிகள் சொத்­துக்கள் இன்­னமும் உரிய நபர்­க­ளுக்கு சென்­ற­டை­ய­வில்லை. யுத்த கால­கட்­டத்தில் இடம்­பெ­யர்ந்த மக்கள் இன்­னமும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­வில்லை.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இது தொடர்பில் பல தட­வைகள் அர­சுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தியும் பல­னேதும் கிடைக்­க­வில்லை என்­பதை நானும் ஏற்றுக் கொள்­கின்றேன். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்றுக் கொடுப்­பதில் உண்­மை­யி­லேயே அக்­கறை காட்­ட­வில்லை. ஒரு சிலர் அரசில் இருந்து கொண்டு பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ரா­கிய போதிலும் குடும்ப ஆட்­சி­யா­ளர்­களின் அழுத்­தங்கள் அவை அனைத்­தையும் தடுத்து விட்­டது. எனினும் தற்­போது பொது எதி­ர­ணி­யொன்று உரு­வா­கி­யி­ருப்­பது சிறு­பான்மை மக்­க­ளுக்கு மிகப் பெரிய நம்­பிக்­கை­யாக மாறி­விட்­டது. தமிழ் முஸ்லிம் மக்கள் தமது உரி­மை­களை வென்­றெ­டுக்­கவும் சுதந்­தி­ர­மாக வாழவும் நல்­ல­தொரு சந்­தர்ப்பம் ஏற்­பட்டு விட்­டது.

அதேபோல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது எடுத்­துள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­துடன் தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்­தினை கருத்தில் கொண்டு நல்­ல­தொரு தீர்­மா­னத்­தினை எடுத்­துள்­ளனர். எனவே தற்­போது எம்­முடன் சிங்­கள தமிழ் முஸ்லிம் தலை­மைகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து விட்­டது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட மலை­யக தமிழ் கட்­சிகள் மற்றும் ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா போன்றோர் பலர் எம்­முடன் கைகோர்த்து சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்­கும; ஒரே நோக்கில் அதற்­கான நம்­பிக்­கையில் கைகோர்த்­துள்­ளனர்.

எனவே இன்னும் ஒரு வார காலத்தில் உருவாகவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும். சிறுபான்மை மக்களையும் இந்த நாட்டின் உண்மையான நாட்டுப் பற்றுள்ள பிரஜைகளாக வாழ இடம் ஏற்படுத்திக் கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.