Header Ads



சூறாவளி பிரச்சாரத்தில் ரவூப் ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் சூறாவளி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை இரவு மத்தியமுகாம், இறக்காமம், அட்டாளைச்சேனை, நிந்தவூர், மருதமுனை ஆகிய இடங்களில் அவர் உரையாற்றுகிறார். 

முன்னதாக, தெஹிஅத்தக்கண்டிய, செவனப்பிட்டி, பொலநறுவை மாவட்டத்தில் தம்பாளை ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு அவா பொது வேடபாளரை ஆதரித்து உரையாற்றினார்.

நாளை அவர் திருகோணமலை மாவட்டத்திலும், மறுநாள் வன்னி மாவட்டத்திலும் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகத் தெரிய வருகின்றது. 

2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ் முஸ்லிம்கள் எதிபார்ததுபோன்று முஸ்லிம் காங்கிரஸ் அரசைவிட்டு வெளியேறிவிட்டார்கள் அவகளின் கடமையை சரியாக சித்து விட்டார்கள் இப்போது நமது கடமையை முழுமண சிய பொதுமக்களாகிய நாம் தயாராக வேண்டும் கடந்காலங்களில் நம் சமுதாயத்துக்கு பொது பல சேனா மற்றும் அவேகளின் சகாக்களும் செய்த அடாவடித்தனத்துக்கு உணர்வு பூர்வமாக உணர்ந்து மைத்திரிபால சிரிசெனாவுக்கு வாக்களிக்க வேண்டும் அன்பான முஸ்லிம்களே ஒருதரம் சிந்தித்து பாருங்கள் நம்சகொதரர்களை அழுத்கமையில் கொலை செய்தது மீண்டும் அந்த உயிர் வருமா அதற்க்கு மஹிந்த எத்தனை கோடி நமக்கு தந்தாலும் ஈடுசெய்ய முடியுமா அபுஜஹில் மக்கா பள்ளியில் ஒட்டக குடலைத்தான் போட்டான் இவர்கள் பண்டியின் இறைச்சியை பள்ளியில் போட்டார்கள் பள்ளிகளை உடைத்தார்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பயத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கினார்கள் உண்மையான மார்க்கல்வியை படிக்கும் மதரச மாணவர்களான நம் சிறார்களை பயங்கரவாத பிச்சி பெறுகிறார்கள் என்று பொய் வதந்தியை கட்டினார்கள் கண்ணியமிக்க உலமாக்களை பயங்கவாதிகள் ஏற்று சொன்னார்கள் ஹலால் அபாய பாடசாலை மாணவிகளின் பர்தா இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிய அரசாங்கத்துக்கு உண்மையான ஒரு முஸ்லிம் வாக்களிக்கவும் மாட்டான் வாக்களிக்க தூண்டவும் மாட்டான் இந்த தேர்தலில் முஸ்லிம்கள் மஹிந்தைக்கு எதிராக வாக்களிப்பது பர்ளு போன்ற கட்டாய கடமை ஆகவே முஸ்லிம்களே அல்லாஹ்விடம் தொழுது துஆ செய்யுங்கள் இந்த அநியாயக்கார அரசாங்கத்தை மாற்றித்தர நாம் அநீதி இழக்கப்பட்ட சமுதாயமாக இருக்கிறோம் நம் துஆவை அல்லாஹ் கபுல் செய்வான் ஆகவே தயவு செய்து காலையில் நேரத்தோடு வாக்குச்சாவடிக்கு சென்று மஹிந்தைக்கு எதிராக மைத்திரிக்கு ஆதரவாக வாக்களியுங்கள் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் விரும்பிய உங்கள் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் அல்லாஹ் நம் அனைவரையும் தீனுக்காக கபூல் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  2. நான் எப்பொழுதும் மு கா வுக்குதான்

    ReplyDelete

Powered by Blogger.