Header Ads



மைத்திரிபால பிரசாரக்கூட்டம் மீது தாக்குதல் (வீடியோ இணைப்பு)



பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக்கூட்டம் மீது நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்
இரத்தினபுரி,  பெல்மதுல்ல என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

பொதுவேட்பாளர் கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் கூட்டத்தின் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளரின் கூட்டத்தின் மீது கல்லெறித்தாக்குதல்!  மைத்திரிபாலவை பாதுகாவலர்கள் காப்பாற்றினர்

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக்கூட்டம் மீது நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி, பெல்மதுல்லை என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.

பொதுவேட்பாளர் கூட்டத்தில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் கல்லெறித் தாக்குதலில் இருந்து அவரின் பாதுகாவலர்கள் மைத்திரிபாலவை காப்பாற்றினர்.

தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள மைத்திரிபால, தம்மை பாதுகாவலர்கள் காப்பாற்றியபோதும் கூட்டத்தின் முன்பகுதியில் நின்ற பலர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=ufbwLlyJhi8#t=261

1 comment:

Powered by Blogger.