Header Ads



மஹிந்தவின் சலுகைகளை பெற்றுக்கொண்டு, 8ம் திகதி அன்னப்பறவைக்கு வாக்களியுங்கள் - மைத்திரி

அபிவிருத்தி நோக்கில் மக்களின் பசியை மறந்த அரசாங்கம், தேர்தல் வருகின்ற நிலையில், அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதாக எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். 

அத்துடன் தேர்தலுக்காக சமுர்தி அதிகாரிகள், கிராம சேவகர்கள் என அனைவரும் தங்களுக்கு தேவையான வகையில் பயன்படுத்திக் கொள்கிறது. கையடக்கத் தொலைபேசிகள், சேலைகள், பணம் என பலவற்றை வழங்குகிறது.

அவை அனைத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் ஜனவரி எட்டாம் திகதி வாக்கு சாவடிக்கு சென்று அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.