Header Ads



ஜனாதிபதி தாமாகவே அரசியல் முடிவுகளை மேற்கொண்டு இறுதிப் போரை முன்னெடுத்தார் - கோத்தபாய

எவரின் உந்துதல் காரணமாகவும் இறுதிப் போரின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவுகளை எடுக்கவில்லை. அவரே தனித்து அந்த தீர்மானங்களை மேற்கொண்டார் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இறுதிப்போருக்கு தாம் உந்துதலை மேற்கொண்டமை காரணமாகவே ஜனாதிபதியினால் தீர்மானங்களை மேற்கொள்ள முடிந்தது என்று அண்மையில் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்த விடயத்தில் யாரும் ஜனாதிபதியிடம் கேட்கவில்லை.

ஜனாதிபதி தாமாகவே அரசியல் முடிவுகளை மேற்கொண்டு இறுதிப் போரை முன்னெடுத்தார் என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி ஈழப் போரை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி திட்டம் வகுத்தார்.

இதன்படியே விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தப்பித்தவறி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றுவிட்டால் என்ற பயத்தால் தான் தப்பிக்கொள்ளும் முயற்சி. எல்லாவற்றையும் அவர்தலையில் போட்ட்டாச்சு.

    ReplyDelete

Powered by Blogger.