Header Ads



கிண்ணியா கடலில் நீராடச்சென்றவர் நீரில் மூழ்கி வபாத்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

மன்னாரைப் பிறப்பிடமாகவும் குறுநாகல் மல்லவப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட றிப்கீன் பாறுக் (றிப்கீ) (38) இன்று (06) பிற்பகல் கிண்ணியா கடலில் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா வைத்தியசாலையில் ஜனாஸா வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணைகளும் இடம் பெறுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் மஞ்சி பிஸ்கட் கம்பனியின் பிராந்திய விற்பனை முகவராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் 1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது இடம் பெயர்ந்து மல்லவப்பிட்டியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.