'மைத்திரிபால உள்ளிட்ட எதிரணியினர் எதிரணியினர், மக்களின் கண்களில் மண்ணைத் தூவுகின்றனர்'
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எதிரணியினர் நாட்டு மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் ஒவ்வொரு முரண்பாடான கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதாக கூறுகிறார், ரணில் விக்ரமசிங்க அதனையே 24 மணித்தியாலங்களுக்குள் செய்ய முடியும் எனக் கூறுகிறார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தவறான கூட்டணியின் ஒரே ஒரு தேவை மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து வௌியேற்றுவதே எனவும், அது நாட்டு மக்களின் நோக்கம் அல்ல தமிழ் டயஸ்போரா மற்றும் வௌிநாட்டுச் சக்திகளின் தேவை எனவும் அமைச்சர் செனவிரத்ன இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
Dosen't matter sand rather than Rajapaksha's poison!
ReplyDelete