நாட்டு மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை நானே உருவாக்கி கொடுத்தேன் - ஜனாதிபதி மகிந்த
எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் முடியாமல் இருந்த நாட்டு மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை தாமே உருவாக்கி கொடுத்ததாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அலரிமாளிகையில் முன்பள்ளி ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய சொத்துக்களான பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் சிறார்கள் நல்வழி படுவதற்கு, ஆரம்ப கல்வி முக்கிய பங்கினை வகுப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
யுத்தம் நிறைவடைந்த ஐந்து வருடங்களுக்குள்ளேயே துறைமுகம், விமான நிலையம் என பல அபிவிருத்திகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டிருந்தார்.
How much one bread? kg sugar? kg rice? funny talk of President
ReplyDelete