Header Ads



விடுதலைப்புலிகள் இன்றும் என்னை பழிவாங்க காத்திருக்கின்றனர் - மஹிந்த

அரசியல் குரோதத்துடன் உள்ள சிலர் தமது குறுகிய நோக்கங்களை நாட்டு மக்களின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள முனைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

அவர்கள் நாட்டை பற்றி சிந்திக்காது தமது பதவிகள், அதிகாரங்கள் பற்றியே சிந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

தனியார் பேருந்து சேவை துறையில் ஈடுபடுகின்றவர்களுடன் இன்று நாரஹேன்பிட்ட ஷாலிகா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் தம்மை இன்று பழிவாங்கும் நோக்கில் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு தன்னுடன் இருந்த சிலரும் உடந்தையாக செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

அதனால் மேம்பாடான ஒரு நாட்டை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.