Header Ads



ஜனாதிபதி மஹிந்த, பதவியில் நீடிக்கும்வரை கனவு மெய்ப்படாது - கபீர் ஹசீம்

ஆளும் கட்சியின் பலர் ஜனாதிபதியாகவொ அல்லது பிரதமராகவோ பதவி வகிக்கலாம் என கனவு காண்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தவிசாளரும் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

என்றாவது ஓர் நாள் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கனவு காண்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியில் நீடிக்கும் இந்த கனவு மெய்ப்படாது என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் உறுப்பினர்களையே இந்த அரசியல் சாசனம் அதிகளவாக பாதித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் உணர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் குடும்ப அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.