'முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரிப்பது என்பது கற்பனையாது' - அஸ்வர்
'முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்க திட்டமிட்டுள்ளனர் என புதன்கிழமை (09.04.14) பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை வாசித்து நான் ஆச்சரியமடைந்தேன்' என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
'இவ்வாறான ஒரு தீர்மானம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் சமாதானத்தையும் சாந்தியையும் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் அரசாங்கத்தில் உள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதுணையாக உள்ளனர்.
இது துர்நோக்குள்ள செய்தியாகும். இது கற்பனையானது. குறிப்பாக ஜெனிவா எம்மை விழுங்க முயலும் இந்த நேரத்தில் எமது நாட்டின் ஒற்றுமையை அழிக்க முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வேறு அரசுக்கு எதிரான சக்திகளின் சதிவேலைகளையிட்டு முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழீழ விடுதலை புலிகளின் யுத்தம் நடந்த 30 வருட காலத்தில் கிழக்கு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் முஸ்லிம்கள் ஆகவும் கூடுதலாக பாதிக்கப்பட்டனர் என்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
முஸ்லிம்களின் விவசாய வர்த்தக முயற்சிகள் புலிகளால் நாசப்படுத்தப்பட்டன. புனித குர்ஆன் பிரதிகளுடன் சென்றவர்கள் மன்னம்பிட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டு புனித நூல்களை முகரும் படி பொலிஸ் நாய்கள் ஏவி விடப்பட்டன. இது இந்நாட்டில் முஸ்லிம் வரலாற்றில் ஆகவும் இருண்ட சகாப்தமாகும்.
தமது பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்திய தமிழ் பயங்கரவாதிகளின் அழிவு பாதையில் போய் அதளபாதாளத்தில் விழ முஸ்லிம்கள் தயாராகவில்லை.
தமிழீழ விடுதலை புலிகள் அப்பாவி தமிழ் மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியதே கண்ட பலன். சகல அரசாங்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவொரு வெளிநாட்டு சதிகாரர்களுக்கும் எதிராக எங்கள் தாய்நாட்டை காக்க அணி திரண்டுள்ளனர்.
ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக எந்தவொரு முஸ்லிம்களும் வாக்களிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வோம';
இந்த நாட்டுக்கு சாந்தியையும் சமாதானத்தையும் கொன்டுவந்த ஜனாதிபதி......???? இவன மாதிரி தலைவர்கள் எமது சமூகத்துக்கு கிடைத்தது ......????????????
ReplyDeleteசமூக பற்றுள்ள முஸ்லிம் எம் பி க்கள்தான் பகிச்கரிப்பார்கள். முஸ்லிம் பெயர் தாங்கிய சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவர்கள் வேண்டுமென்றால் பகிச்கரிக்காமல் இருக்கலாம்.
ReplyDeleteஇஸ்லாத்தையோ முஸ்லிம்களையோ பற்றி பேச அச்வருக்கு எந்த அருகதையும் கிடையாது.
புனித நூல்களை முகரும்படி பொலிஸ் நாய்களை ஏவினர் என்றால் அது பொலிஸ்காரர்கள் செய்த வேளைதானே?பொலிஸ் நாய் பொலிஸிடம் இல்லாமல் புலிகளிடமா இருக்கும்?பொலிஸுதான் இந்த வேளையை செய்தது என்று தெறிந்தும் இன்னுமா நீங்கள் தூங்குகிறீர்கள் மிஸ்டர் அஸ்வர்?அறிவு கூடிவிட்டது,எங்கு போய் முடியுமோ தெறியாது.
ReplyDeleteAduththa thaha Mr. A.R.M.A. Kadar, mic ungalidam itho
ReplyDeleteneer podu balasena seywathu ellam Kanduma ? ippadi pesukireer muslim samuthayathin muthal ethiri podubalasena alla ummai ponra adiwarudikal enpathu muslimkalukku thrium
ReplyDeleteநிட்சயமா உங்க கப்ரு வாழ்க்கையில் தெரியும் யார் சாந்தியும் சமாதானத்தையும் இந்த முழு உலகத்திலும் ஏற்படுத்தியது என்ரு அப்போவும் உங்கமுன்னால் ஒரு மைக் இருக்கும் உக்கார்வத்ற்கு வசதியான சீட் இருக்கும் சொல்லிப் பாருங்க சார் உங்க மோடத்தனமான பதிலை
ReplyDelete