Header Ads



வில்பத்துவிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவு..!

வில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்து மீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வன வள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அப்படி வெளியேறா விட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது இக்குடும்பங்கள் சரணாலயத்துக்கும் வனவளப் பாதுகாப்பு பிரதேசத்திலும் குடியேறியிருப்பதாக தெரிய வந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Vi

1 comment:

  1. போதுபலசேனாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அரசாங்கம் செயல் படுகிறது என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது, மக்கள் உணமையாகவே வில்பத்துவில் குடியேறி உள்ளார்கள் என்று வைத்துக்கொண்டாலும் இதில் என்ன தவறிருக்கிறது, மகிந்த அரசுக்கு மத்தலையில் பறவைகளின் சரணாலயத்தை அழித்து விமானநிலையம் அமைக்கமுடியும் என்றால். கண்டியில் தலதாமாளிகை மாளிகைக்கு சொந்தமான காணியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் சிறைச்சாலை அமைக்க முடியுமென்றால் வீடற்ற அனாதை ஏழைகளுக்கு வீடமைப்பதில் என்ன தவறிருக்கிறது?

    ReplyDelete

Powered by Blogger.