Header Ads



என்னை துண்டுதுண்டாக வெட்டப் போவதாக ஞானசார தேரர் அச்சுறுத்தினார் - விஜித தேரர்

பொதுபல சேனா இயக்கத்தின் பௌத்த பிக்குகளின் ஒழுக்கக் கேடான செயற்பாடுகள் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் என ஜாதிக பலசேனா இயக்கம் அறிவித்துள்ளது.

தம்மை துண்டு துண்டாக வெட்டப் போவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அச்சுறுத்தியதாக வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டால் கொலை செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டில் வில்பத்து காட்டில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குகள் நடந்து கொண்ட விதம் மிகவும் அநாகரீகமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குகள் மதுபானத்தை அருந்தியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் போராட்டங்களை நிறுத்தப் போவதில்லை என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விஜிதவை ஓர் பௌத்த பிக்குவாக தாம் கருதவில்லை எனவும், முஸ்லிம் மதத் தலைவர்களின் பகடை காயாக விஜித செயற்ட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. முஸ்லீம்கறைப்பற்றி எமது அமைச்சர்களுக்கு இல்லாத 'அக்கறை' உங்களுக்கு ஏன்தான் தேவையோ.....??

    ReplyDelete

Powered by Blogger.