பொதுபல சேனா + ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை - ரவூப் ஹக்கீம் கண்டனம்
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஜாதிக பல சேனா என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு பொதுபல சேனா அமைப்பு இடையூறு ஏற்படுத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், பகிரங்கமாக பௌத்த பிக்களுக்கும், முஸ்லிம் மதகுருமாருக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கைகள் தொடர்பில் கொம்பனித்தெரு காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பான காட்சிகள் இதற்கு சான்று பகர்கின்றன என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவான வழிகளில் தங்களது எதிர்ப்புக்களை எந்த தரப்பினரும் வெளியிடுவதில் தவறில்லை என்ற போதிலும், சட்டத்தை கையில் எடுப்பதற்கு அனுமதியளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரத்தை உறுதி செய்யக் கூடிய ஓர் கட்டமைப்பைக் கொண்ட ஆட்சி முறைமயொன்று அவசியமாகின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் பொறிமுறைமையின் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட முடியும் என நாட்டின் நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
What a joke !! Justice minister cries "no justice". Do something or resign if you have any shame in you.
ReplyDeleteDear Shakir, இவரு ரொம்ப நல்லவறு.... வல்லவரு...... அறிக்கை விட்டால்... முடிந்தது இவரது கடமை. சார்... உன்னைச்சொல்லி குற்றமில்லை..... உனக்கு வாக்குப் பிச்சை போட்டார்களே... அவர்களுக்கு .....ல் அடிக்க வேண்டும்.
ReplyDeleteமுதுகெழும்பில்லாத நீதி அமைச்சர் என்றைக்குமே கோமாளிதான். நீதி அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்யமுடியுமென்று பாமர மக்களிடம் புத்திமதி கேட்கிறார்.வேடிக்கைதான்.உங்களை அவமானப்படுத்தவே மகிந்த மாமா உங்களுக்கு நீதி அமைச்சை தந்துள்ளார்,புறிந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteஉங்கவாக்கை பிச்சையாக போட்டு பிச்சை எடுக்குரமாதிரி வச்சா இப்படிதான் நடக்கும் ஒட்டு மொத்தமா ஒருவன் கையை ஓங்க செய்துவிட்டு அப்புரமா இப்படி கேள்விகள் கேட்டால் பரவாயில்லை இருக்கின்ற பத்தையும் பத்துபேருக்கு போட்டால் அந்த பத்துபேரினாலும் எதையுமே கேட்க தகுதியில்லை என்பதை முதலில் புரிந்து கொள்லுங்கள் நாம் திருந்தாத வரை இந்த நாடே திருந்தபோவதில்லை என்பதே நாம் கன்டுகொன்டிருக்கும் உன்மை
ReplyDelete