ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் - சஜித் பிரேமதாச
ஜனாதிபதி தேர்தலி;ல் போட்டியிடத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்காலமில்லை. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமைத்துவ மாற்றம் ஜே.வி.பி.யின் தலைமைத்துவ மாற்றம் ஆகியவற்றினால் சாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு ரணில் விக்ரமசிங்க தீர்மானம் எடுக்க வேண்டும். கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யப்பட்டால் பெருமளவிலான ஆதரவாளர்கள் மீளவும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரனில் விக்கிரமசிங்க இருந்தால் UNP இற்கு எதிர்காலமில்லை...... சரியாக சொன்னார்... ஆனால்.. இவருக்கு NO CHANGE "அவர்" இருக்கும் வரை......!!
ReplyDelete