உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கைக்கு ஜனாதிபதி வாழ்த்து - பெரு வரவேற்பு வழங்க ஏற்பாடு
இருபதுக்கு இருபது கிரிக்கெட் இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஸ் நாட்டில் டாக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுவன்ரி 20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அணியின் தலைவர் லசித் மாலிங்க மற்றும் இறுதிப் போட்டியுடன் டுவன்ரி 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பலத்த வரவேற்பு ஏற்பாடுகள்
2014ஆம் ஆண்டு பங்களாதேஸில் இடம்பெற்ற 20க்கு20 உலக கிண்ணப்போட்டியில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி நாடு திரும்புகிறது.
இந்தநிலையில் இலங்கை அணியை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் ஏற்பாடுகளை செய்துள்ளது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திறந்த ஜீப் வண்டியில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்
Post a Comment