Header Ads



கணவனுடன் ஏற்பட்ட சண்டையில், மகனின் கைவிரல்களை வெட்டிய தாய் கைது

கணவனுடன் ஏற்பட்ட சண்டையில், மகனின் கைவிரல்களை வெட்டிய தாயை போலீசார் கைது செய்தனர். 

காய் நகரை சேர்ந்தவர் மிங்மே சுன், 34, இவர் கணவர் பீவி, மகன் மிங்மிங், 8.

மகனுடைய வீட்டுப்பாடத்தில், உதவி செய்வதற்காக வீட்டுக்கு சீக்கிரம் வராத கணவன் மீது, மிங்மே கடும் கோபம் கொண்டார். வீட்டுக்கு தாமதமாக வந்த கணவனுடன் கடுமையாக சண்டையிட்டார். சண்டைக்குப் பிறகு, மிங்மேயின் கணவர் படுக்கையறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். பெற்றோரின் சண்டையைக் கண்ட, மகன், அழுது கொண்டு இருந்தான். கோபத்துடன் அங்கு வந்த மிங்மே, மகனின் அழுகையால் எரிச்சலுற்று, அவனை தூக்கிக்கொண்டு சமையலறைக்கு சென்றார். அங்கு மாமிசம் வெட்டும் கத்தியால், மகனின், மூன்று கைவிரல்களை வெட்டினார். வலி தாளாமல், மகனின் அலறலைக் கேட்ட, அவனது தந்தை அறையில் இருந்து ஓடிவந்தார். ரத்தம் சொட்ட, சொட்ட அழுது கொண்டிருந்த மகனையும், துண்டிக்கப்பட்ட விரல்களையும் எடுத்துக்கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினார். 

அங்கு வெட்டப்பட்ட விரல்களை ஒட்டும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். போலீசார், மிங்மேயை கைது செய்து விசாரித்தபோது, கணவன் மீதான கோபத்தில் இவ்வாறு செய்ததாகக் கூறினார்.

No comments

Powered by Blogger.