Header Ads



பொதுபல சேனாவின் சவாலை ஏற்க முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு துணிவில்லையா..?

 (உமர் அலி முகம்மதிஸ்மாயில்)

 ஏற்கெனவே  நாங்கள் எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டில் போலீஸ்காரர்களின் வேலையை  செய்யப்போகிறோம் என்று சூளுரைத்திருந்த பொது பல சேனாவின் செயற்பாடுகளை  யாவருக்கும் அழகாக தெரியும்படி நன்கு கை கட்டிக்கொண்டு   புதினம் பார்க்கிறது இலங்கை போலீஸ். சபாஸ்!  இப்படித்தான் இருக்க வேண்டும் நல்ல தேசம் நடிக்கின்ற நாடகங்கள் எல்லாம் முஸ்லீம்களை கொச்சைப்படுத்துவதாகவே இருக்கின்றன.மனைகளை புண்படுத்துகின்றன. நம் நாடு என்று சொல்வதற்கு நா கூசுகின்றது.

எடுத்ததற்கெல்லாம்  அரபு நாடுகளுக்குப் போங்கள், அங்கேயே குடியேறுங்கள். முஸ்லீம் கொலனியை உருவாக்கப்போகிரார்கள். இலங்கை அரபுநாடாகப்போகின்றது, பௌத்தம் அழிகின்றது என்று  இலங்கை வாழ் முஸ்லீம்களை பார்த்து  கூக்குரலிடுகின்ற இந்த  மத வெறி பிடித்த  காவிகள் மட்டும் இலங்கையில்  தொன்று தொட்டு வாழ்ந்தவர்களா?பௌத்தமதம் ஆதி குடிகளின் மதமாக இருந்ததா?அவர்கள்  வந்தேறியதுபோல் பௌத்தமதமும் இந்தியாவில் இருந்து வந்ததேஇநடத்தை கெட்டு வாழ்ந்ததால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு  நாடுகடத்தப்பட்ட அவர்கள் வந்ததுபோல கப்பலில்தான் எங்களது மூதாதையரும் இங்கு வந்தனர்.

பௌத்தமதத்திற்கு முஸ்லீம்கள் மட்டும்தான் கண்ணில் குத்துகிறதா?பொத்தம் கூறுகின்ற பஞ்ச சீலக்கொள்கைகளுக்கும் எதிரான பஞ்சமா பாதகங்கள் இந்த நாட்டிலே நடந்தேறிக்கொண்டிருப்பது  இவர்களுக்கு தெரியவில்லையா?

நிமிடத்திற்கொரு தடவை 'மறக்கலையா' என்று  கூறுகின்ற இவர்கள் கூறு கெட்டவர்கள்தான். மூடர்களே  கப்பலில் வந்த அவர்களுக்கு அன்று விமானம் இருக்கவில்ல இருந்திருந்தால் உங்களுக்கு விமானங்களை கொண்டு வந்து காட்சிக்கு காட்டியிருப்பார்கள்.

அன்று உங்களது நாட்டை காவல் காக்க அரபியர்களின் வழித்தோன்றல்கள் தேவையாக இருந்தனர்இ இன்றும் சருவதேச நாடுகள் உங்கள் குரல்வளையைப்பிடித்து  நெருக்கும்போது அரபு நாட்டிற்கு முஸ்லீம் அமைச்சர்கள்  தூதுவராகச் செல்லுகின்றார்கள் .சருவதேசத்தினை எதிர்த்து  இலங்கைக்கு ஆதரவும் வழங்க வேண்டும் என்று  இறந்து திரிகிறார்கள் இஅதற்குப்பகரமாக  இங்கு வாழும்  இஸ்லாமியர்களை  அந்த நாடுகளுக்கே நாடு கடத்துமாறு நீங்கள் குரைக்கின்றீர்கள்.என்ன நியாயமடா இது? 

இலங்கையின் சிவில் நிருவாகத்தை கவனிக்க அமைச்சுக்கள்இதிணைக்களங்கள் இருக்கின்றன  இஅவை  பார்க்க வேண்டிய வேலைகளை ஒரு காவிக்குழுமம்   நடமாடிக்கொண்டு    அடாவடியாக அநாகரீகமாக செய்து வருகின்றதுஇஆங்காங்கே அங்காடிகள் போல கூட்டம் போட்டு  அவர்களுக்குத் தேவையானவர்களை இழுத்து வசைபாடி வம்பிற்கிழுக்கிறது.தனி மனித  மற்றும் ஒரு சமூகத்தின் உரிமைகளை மறுதலித்து  சேறு பூசி   பேசுகின்றது. எதிர்ப்புச்செயல்களை நடை முறைப்படுத்துகின்றது.அல்குரானை   இழிவுபடுத்திப்பெசுகின்றது முஸ்லீம்களின் அடையாளங்களை கொச்சைப்படுத்திப் பேசுகின்றது.

போதாக்குறைக்கு அரசியல் வாதிகளுக்கு அறைகூவல் விடுக்கின்றார்கள்இஅரை வேக்காடுகளான இவர்களை மேடையில்  எதிர்த்து  நியாயங்களால் இவர்களது வாயை அடைக்க வைக்க இன்னும் முஸ்லீம் தரப்பு அரசியல்வாதிகள்  திராணியற்றவர்களாகவே இருக்கின்றனர்.

முஸ்லீம் அரசியல் வாதிகள் ஏன் தயங்குகின்றார்கள் என்று  மக்களுக்கு புதிராகவே இருக்கின்றது.தர்க்கம் தெரியாதவர்களா?அல்லது தர்கித்தால் தலைவர் கோபித்து விடுவாரே என்று தயங்குகின்றார்களா?.தமது பரம்பரையினருக்கே அரசியல் முகவரி எழுதக்காத்துக்கொண்டிருக்கும்  இந்த கையாலாகதவர்களால்  இலங்கை முஸ்லீம் சமூகத்தின் தலைஎழுத்தெ மாறிவிடும்போல இருக்கிறது..!

வெள்ளையனின் காலத்தில் இஸ்லாமிய சின்னமான தொப்பியை நீதிமன்றத்தில் களற்றமுடியாதேன்று வாதிட்டு வென்ற சட்டத்தரணிகளும்இகலாநிதிதிப் பட்டம்பெற்ற பௌத்த  மதகுருவை  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாயடைக்கச்செய்து போலி வாதங்களை மண் கவ்வச்செய்த  தலைமைகளையும்  இப்பொழுதுள்ள தலைமைகளுடன் ஒப்பிடுகையில் உமிழ்வதர்கென்றே உமிழ்நீர் வாய் நிறைய ஊறுகின்றது.

இதுவரை அரசியல்வாதிகளின் பெயர்களைக் கூறி  நாங்கள் சொன்னோம் எங்களுக்காக குரல் கொடுங்கள் என்று, அரசியல்வாதிகளே இப்பொழுது உங்களது பெயர்களைக்கூறி உங்கள் சட்டைக்கழுத்துக்களை பிடித்து உலுக்கி தைரியம் இருந்தால் வாங்கடா என்று   உங்கள் முகத்தைப்பார்த்தே சவால் இட்டிருக்கின்றார்கள்இநீங்கள் உண்மையான  இஸ்லாமிய இரத்தங்கள் என்றால் அன்று அத்தலைவர் அஷ்ரப்   நடந்து கொண்ட மாதிரி மேடையில் இவர்களை சந்தித்து  உலகறிய  உண்மையை வாதிட்டு சாணக்கியத்தால், விவாதத்திறமைகளால் வாய்பொத்தச்செய்த்து   பேசாமடந்தைகளாக்கி இவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும். இல்லை என்றால் நிகழ்சிகளுக்கு போட்டுக்கொண்டு போகும் கோட்டுக்களை கழற்றி தலையிலே போட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

புதிதாக வளர்ந்து வரும் நல்லாட்சிக்கான  இயக்கம் நல்ல படித்த பேச்சாற்றலுள்ள வரலாறு அறிந்த, தர்கிக்கக்கூடிய பன்மொழிப்பாண்டித்தியம்  பெற்றவர்கலை கொண்டுள்ளது. அவர்களாவது இந்த பொது பலசெனாவை மேடையில் சந்தித்து முகங்குப்புற விளச்செய்யுமா?

உங்கள் ஒற்றுமையின்மையை அறிந்து கொண்டு உங்களது ஓலத்தையும் பலவீனத்தையும்  ஆழம் பார்த்துவிட்டுத்தான் அரச தலைமைகள் அமைதியாக இருகின்றது. திருமண வீடுகளிலும் இரவு விடுதிகளிலும் சந்தித்து சலாம் சொல்லிக்கொள்ளும் நீங்கள் முஸ்லீம்களின் உரிமைகளைப்பாதுகாக்க என் ஒரே மேடை ஏறக்கூடாது.

இன்று வில்பத்து மட்டும் என்று என்ன வேண்டாம் நாளை பொத்துவில்  மறுதினம்  ஓட்டமாவடி இநுரைச்சோலை  என்று  நமது இடங்களையெல்லாம் நம்மிடம் இருந்து பறிக்கும்போது குய்யோ முறையோ என்று தலையில் அடித்துக்கொண்டு  ஓடித்திரியவா போகின்றீர்கள்.

சந்தர்பத்தில் மௌனமாக இருந்து சகலமும் பறிகொடுத்ததமது இனத்தலைவர்களை தமிழ் போராளிகள் ஒவ்வொருத்தராக கொன்றோளித்தார்களே  நினைவிருக்கின்றதா? ஆத்திரத்தில் மற்ற இனத்திற்கு எதிராக போர் செய்யா விடினும் உங்களுக்கெதிராக போர் புரிய பிள்ளைகள் கிளம்பி விடமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்.

சிந்தியுங்கள் உங்கள் சுயனலக்கொட்டுக்களை சற்று கழற்றி வையுங்கள், இவ்வளவு நாளும் அனுபவித்தர்காகவாவது எங்களுக்காக உரிமைக்குரலை உண்மையாக கொடுங்கள். உலகிற்கு உணர்த்துங்கள், உங்களது உலக நாடுகளிற்கான தொடர்புகளை எங்களைக்காக்க பயன்படுத்துங்கள்.எண்கள் சந்ததிகளைக்காக்க  போராடுங்கள், எங்களது வாக்குகளால் நீங்கள் சொத்துக்குவித்திருக்கின்றீர்கள். வெளிநாடுகளில் வீடு வளவு வாங்கியிருக்கின்றீர்கள், பெரிய பெரிய கட்டிடங்களுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கின்றீர்கள். உங்கள் பெயரில் பெட்ரோல் நிரப்பும்  நிலையங்கள்  இருக்கின்றனஇபஸ்கள் ஓடுகின்றன. சில சிறு கப்பல்களும் ஓடுகின்றதாம் இ கம்பனிகள் இயங்குகின்றன. அதில் எல்லாம் பங்கு வேண்டாம்இலாபமும் வேண்டாம்இ.ஒரு நாள் தனிமையில் தொலைபேசிகளை மூடிவிட்டு யாருடனும் பேசாமல்  நீங்கள் இந்த நிலைமைக்கு வந்த  படிகளை  எண்ணிப்பாருங்கள் முதல் படி  எங்களைப்போன்ற அப்பாவிகளாகவே இருப்போம். 

அதற்காகவாவது இந்த  இக்கட்டான நிலையில் எங்களை  காப்பாற்ற முயற்சிக்க கூடாதா?

3 comments:

  1. இந்த ஆக்கத்தை வாசிப்பதற்கு என்னமோ நன்றாக உள்ளது. சும்மாவா.......18 தலைவர்கள். இவர்களால் என்ன தான் சாதிக்க முடியும். தேர்தல் காலத்தில் விழித்தெழும் 'நச்சுப்பாம்புகள்' அல்லவா இவர்கள். சின்னக் குழந்தை தாய் அடித்தாலும் கடித்தாலும் அவள் பின்னால் தான் இருக்குமாம். இதற்கு தாய்ப்பாசம் என்று சொல்லலாம். இந்த 18 பேருக்கு என்னவென்று அழைப்பது.....??

    ReplyDelete
  2. this not enough for them? but still they are silence why ?? post post????

    ReplyDelete
  3. They are waiting for chicken buriyani or nasikuda until mahinda uncle invite

    ReplyDelete

Powered by Blogger.