Header Ads



பாராளுமன்றத்தை முஸ்லிம் எம்.பி.க்கள் பகிஸ்கரிப்பார்களா...?


(Tm) 

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதகாலத்திற்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கிலேயே இந்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வில்பத்து வனப் பிரதேசத்தத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட முஸ்லிம்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கலந்துரையாடப்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டம் மருதானை பூகோஸ் மண்டபத்தில் இலங்கை நேரம்  செவ்வாய்க்கிழமை (08.04.14) இரவு இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமா ஹசன் அலி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஹசன் அலி எம்.பி உரையாற்றுகையில்;

முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசின் கவனத்திற்கும் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லவேண்டுமாயின்  நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமாத காலத்திற்கு சபையமர்வை பகிஸ்கரிக்கவேண்டும்.  இந்த செயற்பாடுகளுக்காக முஸ்லிம் சிவில் அமைப்புகள் அழுத்தம்கொடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பகிஸ்கரிப்பதன் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Did you get permission from MR&Co??

    ReplyDelete
  2. சுயனலம் பாராது,உங்களது ஒற்றுமையை இறைவனுக்காக இதிலேயாவது காட்டுங்கள்.

    ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரனாவான்.
    ஒரு முஸ்லிமுக்கு ஒரு துன்பம் வந்தால்,மற்ற முஸ்லிம்களும் வேதனைப்படுவார்கள்,எதைப்போல் என்றால்,உடலில் ஒரு உறுப்புக்கு தீங்கு வந்தால்,ஏனய உறுப்புக்களும் சேர்ந்து வருந்துவதைப்போலாகும் என்ற கருத்திலானா ஹதீஸை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

    ReplyDelete
  3. Dear muslims mp's Do it to protect the sri lankan muslims

    ReplyDelete
  4. Good suggestion, all unite together and proof that you can do some thing for your society which sent you to the parliament.

    ReplyDelete
  5. நல்ல ஆலோசனை ஆனால் இந்த எல்லா முஸ்லிம் பாராளுமன்ற எம் பிக்கள் சேர்ந்து என்பது, நடப்பது கஷ்டமான விடயம். உங்களுடன் வருபவர்களை அழைத்துக் கொண்டு களத்தில் குதியுங்கள்.... தன்மானமும் இஸ்லாமிய உணர்வும் உள்ளவர்கள் உங்களுடன் இணைந்து கொள்வார்கள். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டபடுவதட்கு குரல் கொடுங்கள் அதே நேரம் இந்த ராஜபக்ச அன் கோ இன் துவேசமான முகத்தை உலகத்தின் கவனத்துக்கும் கொண்டு வாருங்கள் முக்கியமாக அனைத்து முஸ்லிம் நாடுகளின் கவனத்துக்கும் கொண்டுவாருங்கள்.

    கலகம் பிறந்தால் தான் நீதி பிறக்கும்.... அல்லாஹு அக்பர்..!

    ReplyDelete

Powered by Blogger.