Header Ads



ஞானசார தேரரை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜாதிக பலசேன என்ற அமைப்பினால் நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் குழப்பம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜாதிக பல சேனா என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் புகுந்து, அமைப்பைச் சேர்ந்தவர்களை கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கொம்பனி தெரு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எதிர்வரும் 12ம் திகதி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


6 comments:

  1. எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் எலக்சனுக்கு முதல் நாள் தம்புள்ள பள்ளியில குன்டு எரிந்தது எலக்குசனோட போயிட்டோ.

    ReplyDelete
  2. அது சரி. எலக்குசனுக்கு முதல் நாள் தம்புள்ள பள்ளியில குண்டு வெடிச்ச சம்பவம் இலக்குசனோட போயிட்டோ...புலி சென்ஜான் புலி சென்ஜான் அழிச்சிட்டோம் என்டு மட்டும் சொல்லுங்க

    ReplyDelete
  3. Let see what is going to happen. This is going to tell us that whether he is above the law or still law abiding citizen!!

    ReplyDelete
  4. அரசாங்கம் இந்த உத்தரவை ரத்து செய்யும். கலகொடஅத்தேயின் ரௌடி தனம் கூடலாம்.

    ReplyDelete
  5. hahaha romba komadiya iruku
    pirayosanm ilata seithi

    ReplyDelete
  6. அட இதெல்லாம் சும்மா பூச்சான்டியப்பா காரனம் இல்லா கண்துடைப்பு முன்னால் முதல்வர் கருணாநிதியை கூட வீடுபுகுந்து இலுத்து சென்ரார்கள் வெளீப்படையாகவே மீடியாக்களீன் முன்னால் ரவுடிதனம் காட்டும் இவர்மட்டும் என்ன பெரிய பருப்பா?

    ReplyDelete

Powered by Blogger.