Header Ads



மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது - பௌத்த சாசன அமைச்சு


மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தரப்பினரை கட்டுப்படுத்த அதிகாரம் எதுவும் கிடையாது என பௌத்த சாசன அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தரப்பினரை கட்டுப்படுத்த போதியளவு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளது.

சில மதத் தரப்பினர் குழப்பங்களை விளைவிக்கும் போது அதனை தடுக்கும் அதிகாரம் அமைச்சிற்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளது.குற்றச் செயல்கள் இடம்பெற்றால் அதனை மஹாநாயக்க தேரர்களே தட்டிக் கேட்க வேண்டுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பௌத்த பிக்குகள் ஏதேனும் குழப்பங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அந்த பிக்குகள் எந்த பீடத்தைச் சேர்ந்தவர்களோ அந்த பீடத்தின் மஹாயக்க தேரர்கள், உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.சில சந்தர்ப்பங்களில் பௌத்த சாசன அமைச்சரை அமைச்சிற்கு வந்து பௌத்த பிக்குகள் திட்டிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. gtn

1 comment:

  1. நல்லதோர் நாடு.. நல்லதோர் சட்டம்.. நல்ல பண்ணி கூட்டம் ...

    ReplyDelete

Powered by Blogger.