வாமி நிறுவன ஏற்பாட்டில் 5 ம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2013 ஆம் ஆண்டு ஐந்தாம்தர புரமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வாமி நிறுவனத்தின் அணுசரனையுடன் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் விமான நிலைய குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுப் பொறுப்பாளருமான எஸ்.எல்.மன்சூர் தலைமையில் இன்று (5) கொழும்பு குணசிங்கபுர பிரதீபா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கொழும்பு(66), கேகாலை(117) களுத்தறை(64), மாத்தறை(25), காலி(32), கம்பஹா(52), இரத்தினபுரி(26), அம்பாந்தோட்டை(4) ஆகிய மாவட்டங்களில் தமிழ் மொழி மூலம் சித்தியடைந்த சுமார் 386 மாணவர்களுக்கு பிரமுகர்களால் சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment