Header Ads



கல்முனையில் நேருக்குநேர் மோதிய பஸ்கள் - 3 பேர் மரணம் (படங்கள் இணைப்பு)


(எம்.வை.அமீர் + அகமட் எஸ். முகைடீன் V.vy;.[D}tu;) 

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சுப்பர்லைன் ரக பஸ் ஒன்றும் அக்கரைப்பற்ரில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸும் இன்று அதிகாலை நேருக்குநேர் மோதிகொண்டதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் கல்முனைக்குடி மொஹிதீன் ஜும்மாபள்ளிவாசல் வளைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபாத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த தமீம் அவர்களின் மனைவி மின்னா உட்பட அக்கரைப்பற்ரை சேர்ந்த பெண் ஒருவரும் அதே இடத்தில் மரணித்ததாகவும் கொழும்பை சேர்ந்த ஒருவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விசேட பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் சுமார் 20 க்கு மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மேலதிக விசாரணைகளை கல்முனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.




1 comment:

  1. காட்சிகளைப் பார்க்கும்போது விபத்தில் பாதிப்புற்றவர்களின் அவல நிலையை நினைத்து கவலையாகவுள்ளது. அதேவேளை விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படமொன்று நினைவுக்கு வருகின்றது. அத்திரைப்படத்தில், ஒவ்வொரு பயணியும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளோடு பயணத்தை ஆரம்பித்திருப்பதையும் அந்த விபத்து எப்படி எல்லாவற்றையும் மாற்றிப்போட்டு விடுகின்றது என்பதையும் காட்டியிருப்பார்கள். அதை மீண்டும் வேதனையோடு உணர வைத்திருக்கின்றது இந்த விபத்து.

    ReplyDelete

Powered by Blogger.