Header Ads



ஆதரவு யாருக்கு.. ? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 15–ந்தேதி அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா பேசாததால் அ.தி.மு.க.வுக்கு அளித்த ஆதரவை அந்த அமைப்பு வாபஸ் பெற்றது. சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 15–ந்தேதி (செல்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு திருச்சியில் உள்ள ரோஷன் மகாலில் நடக்கிறது. மாநில தலைவர் பி.ஜெய்னுல் ஆபுதீன் தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படுகிறது.

No comments

Powered by Blogger.