Header Ads



தேர்தலில் போட்டியிடுபவர் கை, கால் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஒருவர் காருக்குள் கை கால் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தபோது மீட்கப்பட்டுள்ளார்

குறித்த வேட்பாளரின் மனைவி, தமது கணவர் காணாமற்போயுள்ளதாக இன்று 24-03-2014 காலை மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய தேடுதலை மேற்கொண்ட பொலிஸார் இன்று காலை குறித்த வேட்பாளரை கண்டுபிடித்துள்ளனர்.

கை கால் கட்டபட்ட நிலையில் குறித்த வேட்பாளர் மத்துகம பகுதியிலுள்ள தோட்டமொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.