Header Ads



அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழித்தின போட்டிகள்

(எம்.ஏ.றமீஸ்)

அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேச பாடசாலைகளை ஒன்றிணைத்த அட்டாளைச்சேனை கல்விக் கோட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கோட்ட மட்ட தமிழ் மொழித்தின போட்டிகள் இன்று(22) அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்ச்சிகளை அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கான தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனீபா மற்றும் தமிழ்ப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சவுறுதீன் ஆகியோர் வழி நடத்தினர்.

இருபத்தைந்து அரங்க நிகழ்ச்சிகளுக்கான போட்டிகள் இன்றைய தினம் இடம்பெற்றன. அட்டாளைச்சேனைக் கல்விக் கோட்டத்தின் கீழுள்ள 24 பாடசாலை மாணவர்கள் இதன்போது போட்டிகளுக்காக பங்கு பற்றினர். இக்கல்விக் கோட்டத்திற்கான எழுத்தாக்கப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த 08ம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.