அல்-தாஜூன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்+ஹாசிப் யாஸீன்)
சொறிக்கல்முனை, 6ஆம் கிராமம், அல்-தாஜூன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற
இவ்விளையாட்டுப் போட்டியில் முல்லை (பச்சை) இல்லம் 395 புள்ளியைப் பெற்று முதலாம் இடத்தையும், மருதம் (மஞ்சள்) இல்லம் 387 புள்ளியைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டு பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் சம்பியனாக முல்லை (பச்சை) இல்லம் தெரிவானது.
இவ்விளையாட்டுப் போட்டியில் அல்-தாஜூன் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.பி.எம்.ஸவாஹிர், பிரதி அதிபர் எம்.வீ.எல்.கிறிஸ்துராஜா, தொழில் அதிபர்களான எம்.எம்.ஜமால்தீன், எம்.நவாஸ், விளையாட்டுக் குழு செயலாளர் ஏ.கே.பாரிஸ் முன்னாள் பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள், விளையாட்டுக் கழங்களின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment